search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருகம்பாக்கம் தற்கொலை"

    விருகம்பாக்கத்தில் கடன் பிரச்சனையால் விஷம் குடித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீகார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    விருகம்பாக்கம் இளங்கோ நகர் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். கூலி தொழிலாளி. கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சனையால் தவித்து வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணன் கடந்த 8-ந்தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்தார்.

    இதில் மயங்கி விழுந்த கிருஷ்ணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச் சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×